அவன்:
கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்
அவள்:
கண்ணோடு வா நீ ஹே ஹே
மோகத்தாளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டுச்செல்ல
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்
அவன்:
என்னை நீயென்று உணர்ந்து கொண்டேன்
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்
அவள்:
ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்
உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சைத் தீயில் தள்ள
அவள்:
தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
அவன்:
வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண்மேலே விழுந்து தீயாக
அவள்:
தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல
படம் | மங்காத்தா |
---|---|
வெளியீடு | 2011 |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
இயக்கம் | வெங்கட் பிரபு |
பாடியவர்கள் | எஸ்.பி.பி.சரண் & பவதாரிணி |
வரிகள் | நிரஞ்சன் பாரதி |