நீ கிடைத்தாய்

அவன்:
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாளே

அவள்:
என் நினைவோ தினம் உன்னைச் சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னைக் கண்டேனே
என்னானேன் ஏதானேன்

அவன்:
விடுதலை ஆனவனோ அடிமை என்றாவதென்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற

அவள்:
படைத்த போதே
இணைந்த உயிரானோம்
பதவியேற்றோம் உண்மை இது தான்

அவள்:
மனமெல்லாம் துள்ளத் துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம் வண்ணம் பூசி விளையாடிடுதே

அவன்:
மனம் எல்லாம் துள்ளத் துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாதோ

அவள்:
என் நினைவோ தினம் உன்னைச் சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னைக் கண்டேனே
என்னானேன் ஏதானேன்

அவள்:
எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில் சொல்லாமலே
என் இதயம் நின்றே போகும்

அவன்:
அன்புடைய ஆதிக்கமே
என்றும் என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே
வாழும் வரை நீடிக்குமே
நீங்காதே

அவள்:
எனது ஜீவன் எனது ஆதாரம்
எனது சுவாசம் உந்தன் கண்ணோரம்

அவன்:
நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறப்பாலே
இது உந்தன் அன்பாலே
இந்நாளே பொன்னாளே

அவள்:
என் நினைவோ தினம் உன்னைச் சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகம் தானே
எங்கும் உன்னைக் கண்டேனே
என்னானேன் ஏதானேன்
அவன்:
மனம் எல்லாம் துள்ளத் துள்ள
மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும் தங்கி பாயாதோ

படம் சென்னை 600028 (2)
வெளியீடு 2016
இசை யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் வெங்கட் பிரபு
பாடியவர்கள் ஹரிசரண் & சின்மயி
வரிகள் நிரஞ்சன் பாரதி