இதயத்தை ஒரு நொடி நிறுத்தினாய்
அதற்குள்ளே உன்னையே பொருத்தினாய்
அதில் காதல் கொடுத்து மாதினி நீயும் விரைந்தாய்
என் தேகம் குளிர மனதிலே பரவசம் தருகிறாய்
நீ புன்னகையில் என்னை அள்ளி ஏன் நூறுமுறை கொல்கின்றாய்
போதாது என மீண்டும் மீண்டும் செய்கின்றாய்
இறகாய் என்னைத் தொடுகின்றாய்
அழகாய் இம்சை செய்கின்றாய்
சுகமாய் நெஞ்சில் பாரங்கள் தருகின்றாய்
உன் விழிகளெனும் கடிகாரத்தில் என் காதலினைப் பார்க்கின்றேன்
கூரான உன் இமைகள் இரண்டும் முள் தானே
உன்னைப் பார்க்கும் போதெல்லாம் காலம் இங்கு ஓடாதே
முட்கள் என்னைக் குத்தாதே பேரன்பே
படம் | செம போத ஆகாத |
---|---|
வெளியீடு | 2017 |
இசை | யுவன் சங்கர் ராஜா |
இயக்கம் | பத்ரி வெங்கடேஷ் |
பாடியவர்கள் | யுவன் சங்கர் ராஜா |
வரிகள் | நிரஞ்சன் பாரதி |