அவள்:
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளி தானோ
இதற்கு பேரென்ன காதலே
இந்த நிலை வரக் காரணம் நீ தானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அது தான் கடவுள் வரமே
அவன்:
உயிரின் மேலொரு உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளி தானோ
அவள்:
மொழியேதும் தெரியாமல்
விழிகள் இரண்டும் பேசுதே
அவன்:
விழியோடு விழி சேர்ந்தால்
புதிய மொழி தோன்றுதே
அவள்:
வலிகூட சுகம் தானே
இது காதல் முகம் தானே
அவன்:
ரசித்தேனடி தினம் தினம்
அவன்:
வெயிலோடு மழை தூவ
பருவங்களை மாற்றினாய்
அவள்:
விழியிரண்டில் மெதுவாக
உனது நிறம் ஊற்றினாய்
அவன்:
இந்தக் காதல் கடல் தானே
அதில் தேகம் துளி தானே
அவள்:
அலைபாயுதே மனம் மனம்
படம் | வடகறி |
---|---|
வெளியீடு | 2014 |
இசை | யுவன் சங்கர் ராஜா |
இயக்கம் | சரவணன் |
பாடியவர்கள் | சத்யன், பிரியா ஹேமேஷ் |
வரிகள் | நிரஞ்சன் பாரதி |