அவன்:
தூங்காம உன்ன சுத்தி சுத்தி திரியறேன்
நீங்காம வருவாயா?
அவள்:
தாங்காம நெஞ்சை பொத்தி பொத்தி வச்சிருக்கேன்
தீண்டாம விடுவாயா
அவன்:
என்னோட நிலவரம் எல்லாமே கலவரம்
கண்ணோட வருகுது ஊத்து
திண்டாடி துடிக்கறேன் தள்ளாடி நடக்குறேன்
எந்நாளும் உனை எதிர்பார்த்து பார்த்து
அவன்:
தூங்காம உன்ன சுத்தி சுத்தி திரியறேன்
நீங்காம வருவாயா?
அவள்:
தீண்டாதே….
தூரத்துல அட உருகி உருகி தினம் வாடாதோ ஒரு உள்ளம்
நேரத்துல இவ நெருங்கி நெருங்கி வந்து சேர்ந்தா தான் அது துள்ளும்(2)
சேர்ந்தா தான் அது துள்ளும்
அள்ளாம அவன அள்ளும்
அவன்:
வெயிலும் தான் சுடுமா அருகில் நீயுள்ள போது
பிரிவு தான் சுடுதே சொல்ல வார்த்தைகள் ஏது
அவள்:
இனம் புரியாத சோகம்
எனைப் பந்தாடிப் போகும்
நான் தடுமாறிப் போகிறேன்
நான் சாகாமல் சாகிறேன்
அவன்:
தன்னந்தனிமையில் இருக்குது நெஞ்சம்
வாழ நினைக்குது கொஞ்சம்
அவள்:
இதயத்திலே பெரும் புயலொன்னு அடிக்குது
அனுதினமும் என்னைக் கடந்திட துடிக்குது
தாங்காம நெஞ்சை பொத்தி பொத்தி வச்சிருக்கேன்
தீண்டாம விடுவாயா
அவன்: தூங்காம…
அவள்:
அன்று உன் பார்வையோ காதல் விதையாகிப் போச்சு
இன்று தான் மலர்ந்து மனதில் பூவாக ஆச்சு
அவன்:
மழை தருகின்ற மேகம் எனைப் பார்க்காமல் போக
தேன் மழையாகத் தூவுமா என் தாகங்கள் தீருமா
அவள்:
வானம் முழுவதும் நான் பறந்தேனே
என்னை நான் மறந்தேனே
அவன்:
அடி மனசு ஒரு மெழுகென உருகுது
அலைகடலில் அது துரும்பென மிதக்குது
தூங்காம உன்ன சுத்தி சுத்தி திரியறேன்
நீங்காம வருவாயா?
அவள்:
நீ தானே நெஞ்சுக்குழியினில் இருப்பது
போவேனோ உனை விட்டு
கண்ணோடு கனவுகள் நெஞ்சோடு நினைவுகள்
உள்ளூற இருக்குது பூத்து
சொல்லாத இனிமைகள் இல்லாத உணர்வுகள்
கொண்டாட நினைக்குது பார்த்து பார்த்து… நீ தானே
படம் | நளனும் நந்தினியும் |
---|---|
வெளியீடு | 2014 |
இசை | அஷ்வத் |
இயக்கம் | வெங்கடேஷ் |
பாடியவர்கள் | பல்ராம், சின்மயி |
வரிகள் | நிரஞ்சன் பாரதி |